பிறப்பு
பிறப்பும் இறப்பும் இறையருளும்..
பிறப்பு எனும் பேரதிசயத்தை இன்னும் எவரும் புரிந்து கொண்டபாடில்லை, பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது.
எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம். ..
எதனால் இந்த பிறப்புகள்?
பிறப்பினால் யாருக்கு நன்மை.?
ஒரு நொடியும் தவறாமல் நடைபெறும் ,
இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது?
பிறப்புக்கும் இறப்புக்கும் யார்
அல்லது எது காரணம் ?
இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ?
விதிப்படி பிறப்பதும் , விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது.?
இப்படியே போனால் பிறப்பின் மீதும் ,
இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ?
ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ?
எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ?
அப்படியானால்,
இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன.? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா.?
பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில் பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.
பிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை .
பிறப்பினை எதற்கும் உவமை சொல்லமுடியாதென்றார் மேலோர்.
பிறப்பினை இறப்பாக மாற்றக்கூடாது என்பதில் சமர்த்தர்கள் சித்தர்கள்...
இப்படி பல வகையிலும் சிறந்ததான பிறப்பு ஏன் இறப்பாகவும் மாறுகின்றது?
பிறப்பு சிறந்ததென்றால் இறப்பு வேண்டாமே உத்தமர்களும் மரணிக்கின்றனர் , உன்மத்தர்களும் மரணிக்கின்றனர்.
ஏன் இந்த நேர்தல் ?
உத்தமரும் இறப்பர் என்றால் நான் உன்மத்தனாக இருக்கின்றேன் எனும் மனோபாபம் மனிதர்களுக்கு ஏற்படாதா?
பிறப்பினை அரிதென்ற ஔவை பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டுகின்றார்.
ஏன் இந்த முரண்பாடு
கேள்விகள் , கேள்விகள் ?!?!
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பள்ளிவரை நாங்கள் , படைக்கிறவன் இறைவன் என்கிறார்.
அதாவது பள்ளியறையில் ஒன்று கலப்பதோடு மனிதனின் முயற்சி முடிந்தது அதன்பின் பிறப்பினை அருள்வது இறைவனின் பேரருள் என்கிறார்...
அது உண்மைதான், பள்ளியறையில் ஒன்று கலந்தவர்கள் அனைவரும் புத்திரபாக்கியம் பெறுவதில்லை.
அப்படியென்றால் பிறப்பினை தந்தருள்வது இறைவன்தான் (இயற்கைதான்) என்பதில் வேறு கருத்தில்லை...
அவரவர் வம்சம் தழைக்கவும் , வம்சம் தடைபட்டு போகவும் இறைவனே (இயற்கையே) முன் நின்று வழி நடத்துகின்றார். இந்த தோன்றலையும் , தோன்றா நிலையையும் இறைவன் (இயற்கை) அவரவர் விதிப்படி மிகச் சரியாக அமைத்து தருகின்றது.
இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஆனால் இந்த பிறப்பினாலும் அதன்பின் வரும் இறப்பினாலும் என்னபயன்.?
ஒரு வம்சம் தழைப்பதனாலும் , வம்சம் அழிந்து போனாலும் யாருக்கு என்ன பயன்?
பகவான் கிருஷ்ணனாக இருந்தாலும் ,சுவாமி விவேகானந்தராக இருந்தாலும் ,பேரரசன் ராஜ ராஜ சோழனாக இருந்தாலும்
பூமியிலேயே தங்கிவிட முடியாது .
இங்கேயே தங்கிவிட முடியாது என்றால் பிறப்பு எதற்கு ?
இறப்பு எதற்கு ?
இறந்துதான் போகும் என்றால் பிறப்பே இல்லாமல் இருக்கலாமே
பிறந்து அதன்பின் ஏன் இறப்பு நேரவேண்டும் ?
1. பிறப்பின் பின் அடையும் நாவின் சுவை , தேக சுகம் , பதவி , புகழ் தரும் மயக்கம் .மது , மாது என வருகின்ற போக சுகங்களும் பின் மரணம்.
2. பிறப்பின் பின் மனிதன் , யோகி , ஞானி , தீர்க்கதரிசி , மகரிஷி பின் மரணம் .
என்ன இது ? ஏதோ ஒன்று இடிக்கின்றதே ? என்ன அது ?
பிறப்பின் காரணம் புரியாத ஒன்றுதான். ஆனால் அதில் ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது .
அது என்ன ?
பிறப்பு என்பதனை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் ஒன்று விளங்குகின்றது , அதாவது ஜீவராசிகளின் பாப , புண்ணிய பலனாகவே பிறப்பு ஏற்படுகின்றது.
முற்பிறப்பிலும் , இப்பிறப்பிலும் செய்த பாப , புண்ணியங்களின் பலனாகவே இறப்பு நேர்கின்றது.
மீண்டும் பாப , புண்ணிய பலனாக பிறப்பு , மீண்டும் முற்பிறப்பின் , இப்பிறப்பின் பலனாக இறப்பு .
இதுவே தொடர்கதையாகி இன்றுவரை மட்டுமல்ல , இனி வரும் காலமும் தொடரும் கதை.
இதன் பொருளென்ன ?
இதற்கு விடைதான் என்ன ?
இதோ ஒரு சிற்றறிவிற்க்கு தோன்றிய விடை .....
ஒரு காரியத்தின் நிமித்தமாக நாம் வெளியூருக்கு சென்றால் , அந்த காரியம் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வோம் ?
மீண்டும் அந்த ஊருக்கு சென்று அந்த காரியத்தினை செய்து முடிப்போம்.
அப்போதும் முடியாது போனால் மீண்டும் ஒருநாள் சென்று அந்த காரியத்தினை செய்வோம்.
இப்படி அந்த குறிப்பிட்ட காரியம் முடியும் வரை அந்த ஊருக்கு மீண்டும் மீண்டும் செல்வோம் அல்லவா
அது போலவே நாம் நமது ஒவ்வொரு பிறப்பின்போதும் அறிந்தும் , அறியாமலும் நாம் செய்த பாப , புண்ணிய காரியங்களின் தொகுப்பை கரைப்பதற்காக மீண்டும் புவியில் பிறப்பிக்கப்படுகின்றோம் ,
ஆனால்,
பிறப்பினை , அதன் சிறப்பினை உணராமல் மீண்டும் மீண்டும் பாபங்களையும் , புண்ணியங்களையும் செய்து மரணித்து மீண்டும் இறைவனின்(இயற்கையின்)பேரருள் கருணையால் பிறப்பிக்கப்படுகின்றோம்.
நாம் எதற்காக பிறப்பிக்கப்பட்டோமோ அதனை முற்றிலுமாக மறந்து , வெறும் கேளிக்கை , பதவி , புகழ் , பணபலம் , பெண் சுகம் அல்லது ஆண் சுகம் என புறச் சுக ஆவலிலேயே வாழ்நாளை கழிக்கின்றோம், மரணிக்கின்றோம்.
நாம் வந்த காரியத்தினை முடிக்காததினால் மீண்டும் ஒரு பிறவி தரப்பட்டு இப்பிறவியிலாவது நாம் மாறுவோம் என எதிர்பார்க்கப்படுகின்றது .
ஆனால் மனிதன் அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும் சிற்றின்ப வேட்கையில் சிக்கி சீரழிகின்றான் , மரணிக்கின்றான்.
இப்படியே பிறந்து இறந்து , பிறந்து இறந்து தொடர்கதையாகி போகின்றான்.
ஆக பிறப்பு என்பது
மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வாய்ப்பு ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வரம் ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு அருள்கொடை ,
பிறப்பு என்பது மீண்டும் தரப்படும் இறைவனின் (இயற்கையின்) பேரருள்.
பிறப்பின் வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை ஜீவன்கள் பெற கொடுக்கப்படும் இறைவனின் பெருந்தயை...
இதனை ஸ்ரீ நாரத மகரிஷி கண்ட ஒரு சம்பவம் விளக்குகிறது..
நாரத மகரிஷி ஒருமுறை ஒரு பன்றி குட்டி போடுவதை காண்கின்றார்.
இவரைக் கண்டதும் பன்றியின் குட்டி மரணிக்கின்றது.
பதறிப்போன மகரிஷி வேறுபக்கம் போகின்றார் , அங்கே ஒரு ஆடு குட்டி போடுகின்றது அதனைக் காணுகின்றார் மகரிஷி , பிறந்த அந்த ஆட்டுக்குட்டி இவரைக் கண்டதும் இறந்து போகின்றது , மேலும் பதறிப்போன நாரதர் வேறொரு இடத்தில் காராம்பசு கன்று போடுவதை பார்க்கின்றார் , அந்த கன்றும் பார்க்கின்றது , பார்த்தவுடன் கன்று மரணம் அடைகின்றது .
மிகவும் கவலை அடைந்த நாரத மகரிஷி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார் , அவரை சமாதானப்படுத்தும் மகாவிஷ்ணு , நாரதா “ நீ சென்று அதோ அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனை சென்று கண்டுவா” என்கின்றார்.
ஸ்வாமீ , ஏதும் விபரீதம் நடைபெறாதே என வினவுகின்றார் , நாரதர். கவலைப்படாதே சென்று பார் என்கின்றார் மகாவிஷ்ணு.
நாரத மகரிஷி சென்றார் அந்த குழந்தையை கண்டார் , கண்டவுடன் சட்டென்று திரும்பினார் , அப்போது அந்த குழந்தை பேசியது “ மகரிஷி அவர்களே , கொஞ்சம் நில்லுங்கள்.
நான் பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை என்மீது பட ஆட்டின் குட்டியாக மறுபிறப்பெடுத்தேன், மீண்டும் தங்களின் பார்வையை என்மீது செலுத்தி என்னை காராம்பசுவின் கன்றாக பிறக்கச் செய்தீர்கள் , மறுபடியும் தங்களின் திவ்ய திருஷ்டியைப் பெரும் பாக்கியம் பெற்ற நான் இன்று மன்னனின் வாரிசாக பிறக்கும் வாய்ப்பினை பெற்றேன் தங்களின் நற்கருணைப் பார்வையைப் பெற்ற நான் புவியில் நல்லவனாக வாழும் பேற்றினை அருள்வீர்களாக என வேண்டிக் கொண்டது.
இதிலிருந்து புரிவது என்னவென்றால் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் மேன்மையை நோக்கிய பயணமாக அமையவேண்டியது , ஆனால் மன மாயையினால் கீழ்மையை நோக்கிய பயணமாக மாற்றம் கண்டு இன்று பல்லாயிரம் கோடி உயிரினங்களாக பல்கி பெருகி நிற்கின்றது.
பிறப்பின் அவசியமும் , பெருமையும் ஜீவராசிகளை மேல்நிலையை அடையச் செய்வதற்காக இறைவன் (இயற்கை) தரும் சந்தர்ப்பம்.
பிறப்பு ஜீவன்களுக்குத்தான் ஆதாயம்.
ஆகவே பிறப்பினை கேவலப்படுத்தி வாழ்ந்து மரிக்காமல் , பிறப்பினை உணர்ந்து மேன்மையான வாழ்நிலையை அடைந்திட பயன்படுத்தினால் , நிச்சயம் , மீண்டும் பிறக்கும் நிலை அற்றுபோகும் வாய்ப்பினை பெறலாம் என்பது சர்வ நிச்சயம்.
இல்லையானால் மீண்டும் மகாபாரதம் போல ஒரு பேரழிவினை காண்பது திண்ணம்.
கொத்துகொத்தாக ஜீவன்கள் கொல்லப்படும் , சுனாமி, பெருந்தீ போன்ற அதனை இறைவனே (இயற்கையே) முன் நின்று நடத்தும் என்பதும் நிச்சயம்.
பிறந்த பிறப்பினை உயர்த்துவோம்..
ஒரு பிறப்பின் பதிவு..
Kannada:
ಜನನ ಮತ್ತು ಮರಣ ದೈವಿಕ ..
ಹುಟ್ಟಿನ ಸ್ವರ್ಗವನ್ನು ಯಾರೂ ಇನ್ನೂ ಅರ್ಥಮಾಡಿಕೊಂಡಿಲ್ಲ, ಮತ್ತು ಜನ್ಮವು ರಹಸ್ಯವಾಗಿ ಉಳಿದಿದೆ.
ಎಷ್ಟೇ ರಹಸ್ಯಗಳನ್ನು ಬಿಚ್ಚಿಟ್ಟರೂ, ಪ್ರಕೃತಿಯು (ಭಗವಂತ) ಹುಟ್ಟಿನ ಹಿರಿಮೆಯನ್ನು ಆತನ ಆಳ್ವಿಕೆಯಲ್ಲಿ ಉಳಿಸಿಕೊಂಡಿದ್ದಾನೆ ಎಂಬುದನ್ನು ನಾವು ಅರಿತುಕೊಳ್ಳುತ್ತೇವೆ. ..
ಏಕೆ ಈ ಜನ್ಮಗಳು?
ಹುಟ್ಟಿನಿಂದ ಯಾರಿಗೆ ಲಾಭ?
ಒಂದು ಸೆಕೆಂಡ್ ತಪ್ಪಿಸಿಕೊಳ್ಳದೇ ನಡೆಯುತ್ತದೆ,
ಈ ಜನ್ಮ ಘಟನೆಯಿಂದ ಏನು ಪ್ರಯೋಜನ?
ಯಾರು ಹುಟ್ಟಿ ಸಾಯುತ್ತಾರೆ
ಅಥವಾ ಕಾರಣವೇನು?
ಹಾಗಾದರೆ ಅವರಿಗೆ ಅಥವಾ ಅದರಿಂದ ಏನು ಪ್ರಯೋಜನ?
ಜನ್ಮ ಮತ್ತು ವಿಧಿಯ ಭವಿಷ್ಯವು ಮುಂದುವರಿದರೆ, ಅದು ಯಾವಾಗ ಕೊನೆಗೊಳ್ಳುತ್ತದೆ?
ಹಾಗಿದ್ದಲ್ಲಿ, ಹುಟ್ಟಿದಾಗ,
ಸಾವಿನ ಮೇಲೆ ದ್ವೇಷವಿಲ್ಲವೇ?
ಕೆಲವು ರೀತಿಯ ಬೇಸರಗಳಿದ್ದರೆ ಜನನ ಮತ್ತು ನಂತರದ ಸಾವಿನ ಉಪಯೋಗವೇನು?
ಯಾವುದೇ ಕಾರಣವಿಲ್ಲದೆ ಹುಟ್ಟು ಮತ್ತು ಸಾವು ಇರಬಹುದೇ?
ಹಾಗಿದ್ದಲ್ಲಿ,
ಈ ಬ್ರಹ್ಮಾಂಡದ ಮೂಲಕ್ಕೆ ಕಾರಣವೇನು? ಅದಕ್ಕೂ ಜೀವನದ ಜನ್ಮಕ್ಕೂ ಏನಾದರೂ ಸಂಬಂಧವಿದೆಯೇ?
ಜನ್ಮವೆನ್ನುವುದನ್ನು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಅರಿತುಕೊಳ್ಳುವವರೆಗೂ ಜನ್ಮ ರಹಸ್ಯ ತಿಳಿಯಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ.
ಜನನವು ಅಪರೂಪದಲ್ಲಿ ಅಪರೂಪ ಎಂದು ಹೇಳಲಾಗುತ್ತದೆ.
ಮಲೋರ್ ಜನ್ಮವನ್ನು ಯಾವುದಕ್ಕೂ ಹೋಲಿಸಲಾಗದು ಎಂದು ಹೇಳಿದರು.
ಸಮರ್ಥರು ಸಿದ್ಧರು ಜನ್ಮವನ್ನು ಸಾವಾಗಿ ಪರಿವರ್ತಿಸಬಾರದು ಎಂದು ಹೇಳುತ್ತಾರೆ ...
ಹಲವು ರೀತಿಯಲ್ಲಿ ಉತ್ತಮ ಜನ್ಮ ಏಕೆ ಸಾವಿಗೆ ಬದಲಾಗುತ್ತದೆ?
ಸಾವುಗಿಂತ ಜನ್ಮ ಉತ್ತಮ, ಮತ್ತು ಸದ್ಗುಣವುಳ್ಳವರು ಸಾಯುತ್ತಾರೆ.
ಈ ಮುಖಾಮುಖಿ ಏಕೆ?
ಉತ್ತಮ್ ಕೂಡ ರಬ್ಬರ್ ಆಗಿದ್ದರೆ ನಾನು ಉನ್ಮಾದದ ಮನೋಭಾವನೆ ಮನುಷ್ಯರಿಗೆ ಉಂಟಾಗುವುದಿಲ್ಲವೇ?
ಅಪರೂಪವಾಗಿ ಜನಿಸಿದ ಔವಾ, ಇನ್ನೊಂದು ಸ್ಥಳದಲ್ಲಿ ಪುನರ್ಜನ್ಮ ಬಯಸುತ್ತಾನೆ.
ಏಕೆ ಈ ವಿರೋಧಾಭಾಸ
ಪ್ರಶ್ನೆಗಳು, ಪ್ರಶ್ನೆಗಳು?!?!
ನಾವು ಶಾಲೆಯ ಸೃಷ್ಟಿಕರ್ತ, ಭಗವಂತ ಎಂದು ಕವಿಯರಸರ್ ಕನ್ನಡದಾಸನ್ ಹೇಳುತ್ತಾರೆ.
ಅಂದರೆ, ಭಗವಂತನ ಮೊಮ್ಮಗನೇ ಶಾಲೆಯಲ್ಲಿ ಏನನ್ನಾದರೂ ಬೆರೆಸಿ, ಮನುಷ್ಯನ ಪ್ರಯತ್ನ ಮುಗಿದ ನಂತರ ಜನ್ಮ ನೀಡುತ್ತಾನೆ ...
ಇದು ನಿಜ, ಶಾಲೆಗೆ ಹೋಗುವ ಎಲ್ಲರೂ ಆಶೀರ್ವದಿಸುವುದಿಲ್ಲ.
ಹಾಗಾಗಿ ದೇವರು (ಪ್ರಕೃತಿ) ಜನ್ಮ ನೀಡುತ್ತಾನೆ ಎಂದು ಬೇರೆ ಅಭಿಪ್ರಾಯವಿಲ್ಲ ...
ಅವನು (ದೇವರು) ದೇವರ ಮುಂದೆ ನಿಂತು ರಾಜವಂಶ ಮತ್ತು ರಾಜವಂಶವನ್ನು ಅಡ್ಡಿಪಡಿಸುವಂತೆ ಮಾರ್ಗದರ್ಶನ ಮಾಡುತ್ತಾನೆ. ಭಗವಂತ (ಪ್ರಕೃತಿ) ತನ್ನ ನೋಟಕ್ಕೆ ತಕ್ಕಂತೆ ಈ ನೋಟ ಮತ್ತು ನೋಟವನ್ನು ಹೊಂದಿಸುತ್ತಾನೆ.
ಇದರಲ್ಲಿ ಯಾವುದೇ ಅನುಮಾನವಿಲ್ಲ.
ಆದರೆ ಈ ಜನ್ಮ ಮತ್ತು ಅದರ ನಂತರ ಬರುವ ಸಾವಿನ ಉಪಯೋಗವೇನು?
ಒಂದು ರಾಜವಂಶವು ಅರಳಿದರೆ ಮತ್ತು ಒಂದು ರಾಜವಂಶವು ನಾಶವಾದರೆ ಏನು ಪ್ರಯೋಜನ?
ಅದು ಶ್ರೀಕೃಷ್ಣನಾಗಲಿ, ಸ್ವಾಮಿ ವಿವೇಕಾನಂದರಾಗಲಿ, ಚಕ್ರವರ್ತಿ ರಾಜ ರಾಜ ಚೋಳರಾಗಲಿ
ಭೂಮಿಯಲ್ಲಿ ಉಳಿಯಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ.
ನೀವು ಇಲ್ಲಿ ಉಳಿಯಲು ಸಾಧ್ಯವಾಗದಿದ್ದರೆ ಜನ್ಮ ಏಕೆ?
ಸಾವು ಏಕೆ?
ನೀವು ಸತ್ತರೆ, ನೀವು ಹುಟ್ಟದೇ ಇರಬಹುದು
ಹುಟ್ಟಲು ಮತ್ತು ಸಾಯುವ ಸಮಯ ಏಕೆ?
1. ಹುಟ್ಟಿದ ನಂತರ ಸಾಧಿಸುವ ನಾಲಿಗೆಯ ರುಚಿ, ದೇಹದ ಆನಂದ, ಸ್ಥಾನ, ತಲೆತಿರುಗುವಿಕೆ ಕೀರ್ತಿಯನ್ನು ನೀಡುತ್ತದೆ.
2. ಮನುಷ್ಯ, ಯೋಗಿ, geಷಿ, ಪ್ರವಾದಿ, ಮಹರ್ಷಿ ಹುಟ್ಟಿದ ನಂತರ ಸಾವು.
ಇದು ಏನು ? ಏನಾದರೂ ಅಪ್ಪಳಿಸುತ್ತಿದೆಯೇ? ಏನದು?
ಹುಟ್ಟಿದ ಕಾರಣ ಅರ್ಥವಾಗುವುದಿಲ್ಲ. ಆದರೆ ಅದರಲ್ಲಿ ಏನೋ ಅಡಗಿದೆ.
ಏನದು ?
ನಾವು ಹುಟ್ಟಿನ ಅರ್ಥವನ್ನು ಸ್ವಲ್ಪ ಆಳವಾಗಿ ಪರಿಶೀಲಿಸಿದರೆ, ಅಂದರೆ, ಜೀವಿಗಳ ಪಾಪಗಳು ಮತ್ತು ಆಶೀರ್ವಾದಗಳ ಫಲವಾಗಿ ಜನ್ಮ ಸಂಭವಿಸುತ್ತದೆ.
ಮೊದಲ ಜನ್ಮದಲ್ಲಿ ಮತ್ತು ಈ ಜನ್ಮದಲ್ಲಿ ಮಾಡಿದ ಪಾಪಗಳ ಪರಿಣಾಮವಾಗಿ ಸಾವು ಸಂಭವಿಸುತ್ತದೆ.
ಮತ್ತೆ ಪಾಪ, ಆನಂದದ ಫಲವಾಗಿ ಜನನ, ಜನ್ಮದ ಫಲವಾಗಿ ಪುನರ್ಜನ್ಮ, ಈ ಜನ್ಮದ ಫಲವಾಗಿ ಸಾವು.
ಇದು ಇಂದು ಮಾತ್ರವಲ್ಲ, ಭವಿಷ್ಯದಲ್ಲಿ ಸರಣಿಯ ಕಥೆ.
ಇದರ ಅರ್ಥ ಏನು?
ಇದಕ್ಕೆ ಉತ್ತರವೇನು?
ಸ್ವಲ್ಪ ಜ್ಞಾನಕ್ಕೆ ಇಲ್ಲಿದೆ ಉತ್ತರ .....
ನಾವು ಒಂದು ವಿಷಯಕ್ಕಾಗಿ ವಿದೇಶಕ್ಕೆ ಹೋದರೆ, ಅದು ಆಗದಿದ್ದರೆ ನಾವು ಏನು ಮಾಡುವುದು?
ಆ ಪಟ್ಟಣಕ್ಕೆ ಹಿಂತಿರುಗಿ ಮತ್ತು ಆ ಕೆಲಸವನ್ನು ಮಾಡೋಣ.
ನಮಗೆ ಇನ್ನೂ ಸಾಧ್ಯವಾಗದಿದ್ದರೆ, ಒಂದು ದಿನ ಹಿಂದಕ್ಕೆ ಹೋಗಿ ಆ ಕೆಲಸವನ್ನು ಮಾಡೋಣ.
ಆ ನಿರ್ದಿಷ್ಟ ವಿಷಯ ಹೀಗೆ ಮುಗಿಯುವವರೆಗೂ ನಾವು ಮತ್ತೆ ಆ ನಗರಕ್ಕೆ ಹಿಂತಿರುಗುತ್ತೇವೆಯೇ?
ಅದೇ ರೀತಿ ನಮ್ಮ ಪ್ರತಿಯೊಂದು ಜನ್ಮದಲ್ಲಿ ನಾವು ತಿಳಿದೋ ತಿಳಿಯದೆಯೋ ಮಾಡಿದ ಪಾಪ ಮತ್ತು ಪುಣ್ಯದ ಕೆಲಸಗಳನ್ನು ಕರಗಿಸಲು ನಾವು ಭೂಮಿಯ ಮೇಲೆ ಮರುಜನ್ಮ ಪಡೆಯುತ್ತೇವೆ.
ಆದರೆ,
ನಾವು ಜನ್ಮ ಮತ್ತು ಅದರ ಮಹತ್ವವನ್ನು ಅರಿತುಕೊಳ್ಳದೆ ಪದೇ ಪದೇ ಪಾಪಗಳು ಮತ್ತು ಆಶೀರ್ವಾದಗಳನ್ನು ಮಾಡುವ ಮೂಲಕ ದೇವರ (ಪ್ರಕೃತಿ) ಕೃಪೆಯಿಂದ ಮತ್ತೆ ಹುಟ್ಟಿದ್ದೇವೆ.
ನಾವು ಯಾವುದಕ್ಕಾಗಿ ಜನಿಸಿದ್ದೆವೋ ಅದನ್ನು ಸಂಪೂರ್ಣವಾಗಿ ಮರೆತು ಬದುಕುತ್ತೇವೆ ಮತ್ತು ಕೇವಲ ಮನರಂಜನೆ, ಸ್ಥಾನ, ಕೀರ್ತಿ, ಹಣ, ಸ್ತ್ರೀ ಸಂತೋಷ ಅಥವಾ ಪುರುಷ ಸಂತೋಷದಂತಹ ಬಾಹ್ಯ ಸುಖಗಳ ಲಾಲಸೆಯಲ್ಲಿ ಸಾಯುತ್ತೇವೆ.
ನಾವು ಬಂದದ್ದನ್ನು ನಾವು ಪೂರ್ಣಗೊಳಿಸದ ಕಾರಣ, ನಾವು ಮತ್ತೆ ಹುಟ್ಟಿ ಬೇರೆ ಯಾವುದನ್ನಾದರೂ ಬದಲಾಯಿಸುವ ನಿರೀಕ್ಷೆಯಿದೆ.
ಆದರೆ ಮನುಷ್ಯ, ಅದರ ಬಗ್ಗೆ ಕಿಂಚಿತ್ತೂ ಕಾಳಜಿಯಿಲ್ಲದೆ, ಮತ್ತೆ ಕಾಮಪ್ರಚೋದಕ ಅನ್ವೇಷಣೆಯಲ್ಲಿ ಸಿಕ್ಕಿಹಾಕಿಕೊಂಡು ಅವನತಿ ಹೊಂದುತ್ತಾನೆ ಮತ್ತು ಸಾಯುತ್ತಾನೆ.
ಹುಟ್ಟುವುದು ಮತ್ತು ಸಾಯುವುದು, ಹುಟ್ಟುವುದು ಮತ್ತು ಸಾಯುವುದು ಒಂದು ಕಥೆಯಾಗುವುದು ಹೀಗೆ.
ಹಾಗೆಯೇ ಜನ್ಮ ಕೂಡ
ಮತ್ತೊಮ್ಮೆ ಒಂದು ಅವಕಾಶ.
ಜನನ ಮತ್ತೆ ಒಂದು ಅವಕಾಶ,
ಜನನ ಮತ್ತೊಮ್ಮೆ ಆಶೀರ್ವಾದ,
ಜನನ ಮತ್ತೆ ಒಂದು ಆಶೀರ್ವಾದ,
ಜನ್ಮವು ಪುನರುತ್ಥಾನಗೊಂಡ ಭಗವಂತನ (ಪ್ರಕೃತಿಯ) ಶ್ರೇಷ್ಠತೆಯಾಗಿದೆ.
ಹುಟ್ಟಿದವರಿಗೆ ಜನ್ಮ ನೀಡುವ ಮೂಲಕ ಜೀವಗಳನ್ನು ತೆಗೆದುಕೊಳ್ಳುವ ಅವಕಾಶವನ್ನು ನೀಡಿದ ದೇವಿಯು
TELUGU:
జననం మరియు మరణం దైవికం ..
జన్మ స్వర్గాన్ని ఎవరూ ఇంకా అర్థం చేసుకోలేదు మరియు పుట్టుక ఒక రహస్యంగా మిగిలిపోయింది.
ఎన్ని రహస్యాలు బయటపడినా, ప్రకృతి (భగవంతుడు) తన ఆధిపత్యంలో పుట్టుక యొక్క గొప్పతనాన్ని కలిగి ఉందని మేము గ్రహించాము. ..
ఈ జన్మలు ఎందుకు?
పుట్టుకతో ఎవరు ప్రయోజనం పొందుతారు?
ఒక సెకను కూడా కోల్పోకుండా జరుగుతుంది,
ఈ జన్మ కార్యక్రమం వల్ల ప్రయోజనం ఏమిటి?
ఎవరు పుట్టి చనిపోతారు
లేదా కారణం ఏమిటి?
కాబట్టి వారికి లేదా దానివల్ల ప్రయోజనం ఏమిటి?
పుట్టుక మరియు విధి యొక్క విధి సీక్వెల్ అయితే, అది ఎప్పుడు ముగుస్తుంది?
అలా అయితే, పుట్టినప్పుడు,
మరణం పట్ల ద్వేషం లేదా?
ఒకరకమైన విసుగు పుడితే జననం మరియు తదుపరి మరణం వల్ల ఉపయోగం ఏమిటి?
కారణం లేకుండా జననం మరియు మరణం ఉంటుందా?
కనుక,
ఈ విశ్వం ఆవిర్భావానికి కారణం ఏమిటి? దానికి జీవితం పుట్టుకతో ఏదైనా సంబంధం ఉందా?
జననం అంటే ఏమిటో పూర్తిగా తెలుసుకునే వరకు జన్మ రహస్యం తెలియదు.
పుట్టుక చాలా అరుదు అని అంటారు.
పుట్టుకను దేనితోనూ పోల్చలేమని మలోర్ చెప్పాడు.
సమర్థ్ సిద్ధులు పుట్టుకను మరణంగా మార్చకూడదని చెప్పారు ...
అనేక విధాలుగా ఉత్తమ జన్మ ఎందుకు మరణంగా మారుతుంది?
మరణం కంటే పుట్టుక మంచిది, మరియు ధర్మవంతులు చనిపోతారు.
ఈ ఎన్కౌంటర్ ఎందుకు?
ఉత్తమ్ కూడా రబ్బరు అయితే నేను హిస్టీరికల్ అనే వైఖరి మనుషులకు రాదా?
అరుదుగా జన్మించిన vaవా, మరో ప్రదేశంలో పునర్జన్మ కోరుకుంటాడు.
ఎందుకు ఈ వైరుధ్యం
ప్రశ్నలు, ప్రశ్నలు?!?!
కవియరసర్ కన్నదాసన్ మేము స్కూల్ సృష్టికర్త, ప్రభువు అని చెప్పారు.
అంటే, భగవంతుడి మనవడు పాఠశాల గదిలో ఏదో ఒకటి మిళితం చేసి, మనిషి ప్రయత్నం ముగిసిన తర్వాత జన్మనిస్తాడు ...
నిజమే, పాఠశాలలో చదివే ప్రతి ఒక్కరూ ఆశీర్వదించబడరు.
కాబట్టి జన్మనిచ్చేది దేవుడు (ప్రకృతి) అని వేరే అభిప్రాయం లేదు ...
అతను (దేవుడు) దేవుని ముందు నిలబడి, రాజవంశం మరియు రాజవంశాన్ని అడ్డుకోవటానికి మార్గనిర్దేశం చేస్తాడు. ప్రభువు (ప్రకృతి) తన రూపాన్ని బట్టి ఈ రూపాన్ని మరియు రూపాన్ని ఖచ్చితంగా సెట్ చేస్తాడు.
ఇందులో ఎలాంటి సందేహం లేదు.
అయితే ఈ జన్మ మరియు దాని తర్వాత వచ్చే మరణం వల్ల ఉపయోగం ఏమిటి?
ఒక రాజవంశం వృద్ధి చెంది, ఒక రాజవంశం నశిస్తే ఏం ప్రయోజనం?
అది శ్రీకృష్ణుడు అయినా, స్వామి వివేకానంద అయినా, చక్రవర్తి రాజ రాజ చోళుడు అయినా
భూమిపై ఉండలేను.
మీరు ఇక్కడ ఉండలేకపోతే పుట్టుక ఎందుకు?
మరణం ఎందుకు?
మీరు చనిపోతే, మీరు పుట్టకపోవచ్చు
ఎందుకు పుట్టి, చనిపోయే సమయం వచ్చింది?
1. పుట్టిన తర్వాత సాధించే నాలుక రుచి, శరీరం యొక్క ఆనందం, స్థానం, కీర్తిని ఇచ్చే మైకము.
2. మనిషి, యోగి, geషి, ప్రవక్త, మహర్షి పుట్టిన తర్వాత మరణం.
ఇది ఏమిటి? ఏదో క్రాష్ అవుతోందా? అది ఏమిటి?
పుట్టుకకు కారణం అర్థం కాలేదు. కానీ అందులో ఏదో దాగి ఉంది.
అది ఏమిటి ?
మనం పుట్టుక యొక్క అర్థాన్ని లోతుగా పరిశీలిస్తే, అంటే, జీవుల పాపాలు మరియు ఆశీర్వాదాల ఫలితంగా పుట్టుక సంభవిస్తుంది.
మొదటి జన్మలో మరియు ఈ జన్మలో చేసిన పాపాల ఫలితంగా మరణం సంభవిస్తుంది.
మళ్లీ పాపం, ఆనంద ఫలంగా పుట్టుక, పుట్టుక ఫలితంగా పునర్జన్మ, ఈ జన్మ ఫలితంగా మరణం.
ఇది ఈరోజు మాత్రమే కాదు, భవిష్యత్తులో కూడా ఈ సిరీస్ కథ.
దీని అర్థం ఏమిటి?
దీనికి సమాధానం ఏమిటి?
కొంచెం జ్ఞానానికి సమాధానం ఇక్కడ ఉంది .....
మనం ఒక విషయం కోసం విదేశాలకు వెళితే, ఆ విషయం జరగకపోతే మనం ఏమి చేయాలి?
ఆ పట్టణానికి తిరిగి వెళ్లి ఆ పని పూర్తి చేద్దాం.
మేము ఇంకా చేయలేకపోతే, ఒక రోజు వెనక్కి వెళ్లి ఆ పని చేద్దాం.
ఆ ప్రత్యేక విషయం ఇలా ముగిసే వరకు మనం మళ్లీ ఆ నగరానికి తిరిగి వెళ్తామా?
అదేవిధంగా మన ప్రతి జన్మలో తెలిసి లేదా తెలియకుండా మనం చేసిన పాప మరియు పుణ్యకార్యాల సమితిని కరిగించడానికి భూమిపై పునర్జన్మ పొందాము.
కానీ,
పుట్టుక మరియు దాని ప్రాముఖ్యతను గ్రహించకుండా మనం మళ్లీ మళ్లీ పాపాలు మరియు దీవెనలు చేయడం ద్వారా దేవుని (ప్రకృతి) దయతో మళ్లీ జన్మించాము.
మనం కేవలం వినోదం, స్థానం, కీర్తి, డబ్బు, స్త్రీ ఆనందం లేదా పురుషుల ఆనందం వంటి బాహ్య ఆనందాల కోసం కాంక్షిస్తూ మనం దేని కోసం జన్మించామో పూర్తిగా మర్చిపోయి జీవిస్తాము మరియు చనిపోతాము.
మనం దేనికోసం వచ్చామో దాన్ని పూర్తి చేయలేదు కాబట్టి, మనం మళ్లీ జన్మించి, మరేదైనా మారాలని భావిస్తున్నాం.
కానీ మనిషి, దాని గురించి కనీస ఆందోళన లేకుండా, మళ్లీ శృంగార సంబంధాలలో చిక్కుకుని, దిగజారిపోయి చనిపోతాడు.
ఈ విధంగా పుట్టడం మరియు మరణించడం, పుట్టడం మరియు మరణించడం ఒక సాగా అవుతుంది.
పుట్టుక కూడా అంతే
మరోసారి అవకాశం.
పుట్టుక మళ్లీ ఒక అవకాశం,
పుట్టుక మళ్లీ ఒక వరం,
పుట్టుక మళ్లీ ఒక వరం,
పునరుత్థానం చేయబడిన భగవంతుని (ప్రకృతి) యొక్క గొప్పతనం పుట్టుక.
పుట్టని బిడ్డకు జన్మనివ్వడం ద్వారా ప్రాణాలు తీసుకునే అవకాశం ఇవ్వబడిన దేవత
Comments
Post a Comment