பிறப்பு
பிறப்பும் இறப்பும் இறையருளும்.. பிறப்பு எனும் பேரதி ச யத்தை இன்னும் எவரும் புரிந்து கொண்டபாடில்லை, பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது. எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம். .. எதனால் இந்த பிறப்புகள்? பிறப்பினால் யாருக்கு நன்மை.? ஒரு நொடியும் தவறாமல் நடைபெறும் , இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது? பிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் ? இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ? விதிப்படி பிறப்பதும் , விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது.? இப்படியே போனால் பிறப்பின் மீதும் , இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ? ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ? எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ? அப்படியானால், இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன.? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா.? பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வ...